கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு.. மேலும் 3 பேர் அதிரடியாக கைது.. என்ஐஏ தீவிர விசாரணை
சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கார் வெடித்தது. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபின் என்ற நபர் நிகழ்விடத்திலேயே பலியானார். ஜமேஷா முபீன் வீட்டில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கிடைத்தது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்தது. பல்வேறு கோணங்களில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தினர். 14 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றி, தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த நவம்பர் மாதம் கோவை மாவட்டம் போத்தனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்த இப்ராஹீம் என்பவாது மகனான தாஹா நசீரை கைது செய்தனர். சௌரிபாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வரும் நசீரும் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனும் நண்பர்கள் என கூறப்படும் சூழலில் தாஹா நசீர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. அபூ ஹனிபா, சரண் மாரியப்பன் மற்றும் பவாஸ் ரகுமான் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்யும் வேலையில் மூன்று பேரும் ஈடுபட்டு வந்தது தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications