கோவை கார் சிலிண்டர் வெடிப்பு : மேலும் 5 பேர் மீது துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ!
சென்னை : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு துணை குற்றப்பத்திரிகையை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிபொருட்கள், சிலிண்டர் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கின் தீவிர தன்மை கருத்தில் கொண்டு வழக்கானது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தில், சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தொடர்புடைய 11 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது தல்கா, முகமது அசாரூதின், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பிரோஸ் இஸ்மாயில், அப்சர் கான் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம், கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உமர் ஃபாரூக், ஃபிரோஸ் கான், முகமது தௌபீக், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது தற்போது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகள், பொது நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை உள்ளிட்டவற்றை குறிவைத்து, அதற்கு எதிராக போர் தொடுப்பதே இச்சதித்திட்டத்தின் நோக்கம் என குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications