சென்னையில் பாரிமுனை, மண்ணடி உள்பட 3 இடங்களில்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு.. பரபரப்பு
சென்னை: சென்னை பாரிமுனை, மண்ணடி, முத்தையால் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சில கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சினில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக இந்த மூன்று இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை முத்தையால் பேட்டை, பாரிமுனை மற்றும் மண்ணடி ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனையில் உள்ள ஈவினிங் பஜாரில் முகம்மது இலியாஸ், சையன் என்பவர்களுக்கு சொந்தமான கடைகளில் என்.ஐ.அதிஅதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை, மண்ணடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேக இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சினில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக இந்த மூன்று இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கொச்சினில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் விரைவில் என்.ஐ.ஏ தரப்பில் இருந்து வெளியிடப்படும் என தெரிகிறது.
பாரிமுனையில் சயான் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத 300 கிராம் தங்கம், 37 லட்ச ரூபாய் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணடியில் உள்ள ஆப்பிள் பேலஸ், ஆரஞ்சு பேலஸ், கிரீன் பேலஸ் என்ற லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தும் இடம் பரபரப்பான இடம் என்பதால் போலீசாரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மண்ணடி உள்ளிட்ட பகுதியில் கூடுதல் பரபரப்பு தொற்றியுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த சோதனை இரவு வரை நீடிக்கக்கூடும் என்றும் அதன்பிறகே தேசிய புலனாய்வு அதிகாரிகள் இந்த சோதனை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications