Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பாரிமுனை, மண்ணடி உள்பட 3 இடங்களில்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பாரிமுனை, மண்ணடி, முத்தையால் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சில கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சினில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக இந்த மூன்று இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை முத்தையால் பேட்டை, பாரிமுனை மற்றும் மண்ணடி ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனையில் உள்ள ஈவினிங் பஜாரில் முகம்மது இலியாஸ், சையன் என்பவர்களுக்கு சொந்தமான கடைகளில் என்.ஐ.அதிஅதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை, மண்ணடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

NIA officials raided 3 places in Chennai including Parimuna and Manadi

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேக இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சினில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக இந்த மூன்று இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கொச்சினில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் விரைவில் என்.ஐ.ஏ தரப்பில் இருந்து வெளியிடப்படும் என தெரிகிறது.

பாரிமுனையில் சயான் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத 300 கிராம் தங்கம், 37 லட்ச ரூபாய் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணடியில் உள்ள ஆப்பிள் பேலஸ், ஆரஞ்சு பேலஸ், கிரீன் பேலஸ் என்ற லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தும் இடம் பரபரப்பான இடம் என்பதால் போலீசாரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மண்ணடி உள்ளிட்ட பகுதியில் கூடுதல் பரபரப்பு தொற்றியுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த சோதனை இரவு வரை நீடிக்கக்கூடும் என்றும் அதன்பிறகே தேசிய புலனாய்வு அதிகாரிகள் இந்த சோதனை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+