தமிழகம் உட்பட 3 மாநிலங்களில்.. என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போன்கள், Pendrive உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன,
மாவோயிஸ்ட் அமைப்பே சேர்ந்த சிலர் அந்த அமைப்பு தொடங்கப்பட்ட தினத்தன்று கேரள மாநிலம் மலப்புரத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான துண்டுச் சீட்டுகளை வழங்கியதாகவும், பயிற்சி வகுப்புகளை நடத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் இந்திய பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த கேரளா-எடக்கரை மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் 20 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மாவோயிஸ்ட் அமைப்பே சேர்ந்தவர்களின் இடங்களாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி என மொத்தம் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல கேரளாவில் 3 இடங்களிலும் கர்நாடகாவில் 5 இடங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
இன்று நடந்த இந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ்கள், புத்தகங்கள், அறிக்கைகள், நோட்டீஸ்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications