சென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது.. நிதி ஆயோக்கில் பகீர்
Recommended Video
சென்னை: சென்னை, டெல்லி, பெங்களூர் உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் இருக்காது என நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் தண்ணீருக்கான தேடலில் இருக்கிறது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கடும் வறட்சி நிலவுகிறது.

வாடிக்கை
இதனால் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்சினையை போக்க ஒரே வழி நதி நீர் இணைப்பு என்கிறார்கள். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை குறை சொல்வதும் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியை குறை சொல்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

அறிக்கை
இந்தியாவே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில் நிதி ஆயோக் ஒரு பகீர் தகவலை அளித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

40 சதவீதம்
டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது. இந்த விவகாரத்தால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர். மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கும் குடிநீர் வசதி இருக்காது. எனவே தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும்.

மெட்ரோ நகரங்கள்
சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது. ஆனால் சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரங்களும் மழையும் அதிகமாக இருக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்போதே தண்ணீர் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை 21 நகர மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications