நீலகிரி டீ கடைக்குள் புகுந்த மர்ம விலங்கு.. பூனை என நினைத்து உற்று பார்த்தால் ட்விஸ்ட்.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரியில் டீ கடை ஒன்றில் புகுந்த விலங்கு ஒன்றை அங்கு இருந்து மக்கள் பூனை என நினைத்து தூக்கி கொஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் டீ கடைக்கு நேற்று மாலை பூனை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு ஒன்று வந்துள்ளது.

உடலில் கொஞ்சம் சிவப்பான கோடுகளோடு திடகாத்திரமான உடல் அமைப்போடு இருந்துள்ளது. டீ கடைக்காரரும் பால் குடிக்க பூனை வந்துள்ளதாக கருதி உள்ளார்.

பூனை

பூனை

பூனை என்று கருதி சிறிய பாத்திரத்தில் அந்த விலங்கிற்கு பால் வைத்துள்ளார். ஆனால் அது பாலை குடிக்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த மக்கள் அதை பூனை என்று கருதி சிலர் விலங்கோடு விளையாட முயன்று உள்ளனர். இன்னும் சிலர் அதை தூக்கி கொஞ்சவும் முயன்று அதை பிடித்து இழுத்துள்ளனர்.

கோபம்

கோபம்

அப்போது கோபம் கொண்ட அந்த விலங்கு மக்களை கடிக்க பாய்ந்துள்ளது. ஒருவரின் கையில் லேசாக கடித்தும் வைத்துள்ளது. அப்போதுதான் அதன் பல்லை அங்கிருந்த மக்கள் பார்த்துள்ளனர். உற்று பார்த்த பின்தான் வந்தது பூனை அல்ல சிறுத்தை என்று தெரிந்துள்ளது.

சிறுத்தை

சிறுத்தை

ஆம் அது மிக மிக சின்ன சிறுத்தை குட்டி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து வேகமாக அங்கிருந்து மக்கள் தூரம் சென்றனர். அதோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பூனை குட்டின்னு நினைச்சு சிறுத்தை குட்டிக்கா பால் வைத்தோம் என்று டீ கடைக்காரர் திகைப்பில் நின்ற நேரத்தில் அங்கு வனத்துறை விரைந்து வந்தது.

வனத்துறை

வனத்துறை

உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் அந்த சிறுத்தை குட்டியை காப்பாற்றி அங்கிருந்து தூக்கி சென்றனர். அருகில் காட்டில் இருந்து அந்த சிறுத்தை குட்டி வந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+