Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nirmala Sitharaman: ஊறுகாய் மாமி என்றார்கள்.. கிண்டல் பண்ணாங்க.. ஆனால் நல்லது பண்ணினால்.. ஓபனாக பேசிய நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), ஜிஎஸ்டியில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், "மோடி ஏன் இப்படி செய்கிறார்? நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார்? அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜிஎஸ்டியை நடத்த தெரியாது" என்று விமர்சனம் செய்தார்கள் என்றார்.

அதேவேளையில், மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். "அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம்" என்று யாரும் சொல்லவில்லை என்று கூறினார்.

nirmala-sitharaman-at-gst-meeting-if-something-good-happens-no-one-credits-me

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்

கடந்த 2017 ஆம் ஆண்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. பல்வேறு மறைமுக வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு அடுக்குகள் இருந்ததால் அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீடித்த நிலையில், 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டியை 2 அடுக்குகளாக குறைத்தது.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் காரணமாக மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் வரிகள் குறையும். வரும் 22ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வர உள்ள நிலையில், சென்னையில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஊறுகாய்தான் போடதான் தெரியும் என்றார்கள்

"ஜிஎஸ்டியில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், மோடி ஏன் இப்படி செய்கிறார்? நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார்? அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜிஎஸ்டியை நடத்த தெரியாது" என்று விமர்சனம் செய்தார்கள். இதையெல்லாம் நாங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தோம்.

அப்படி பேசாதீர்கள் என்று சொல்லவில்லை

அப்படி பேசாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர்மறையாக பேசவில்லை. ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்திருக்கிறது. மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். "அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம்" என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாமல் போனால் கூட எனக்கு பரவாயில்லை.

நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? மாநிலங்களில் இருந்து வரும் நிதித்துறை அமைச்சர்கள் அமர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கிறார்கள். இத்தனை நாளாக செய்த நல்லதில் அவர்களும்தான் இருந்தார்கள். இன்றைக்கு செய்கிற நல்லதிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள்.

ஜீரோவுக்கு போய்விட்டது

சாலையோர கடைகளில் விற்கப்படும் பாப்கானுக்கு வரி கிடையாது. அதில் உப்பு, சாக்லெட் போட்டு நிறுவனங்களில் விற்றார்கள். எனவே அதற்கு 5 சதவீதமும், 18 சதவீதமும் ஜிஎஸ்டி வகைப்படுத்தப்பட்டது. இதைக் கூட கிண்டல் செய்தனர். "பாப்கானுக்கு 2 விலையா?" என்றனர். இன்றைக்கு எல்லா உணவுப்பொருட்களும் 5 சதவீதத்திற்கு வந்துவிட்டது, ஜீரோவுக்கு போய்விட்டது. வகைப்பாடு பிரச்சனை இப்போது இல்லை.

தீபாவளிக்கு முன்பே செய்ய வேண்டும்

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தை தீபாவளிக்கு முன்பே செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால், தற்போது அது நவராத்திரிக்கு முன்னாடியே அமல்படுத்தப்படுகிறது. காரணம், நவராத்திரிக்கும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவார்கள் என்பதால் முன்கூட்டியே இந்த வரி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்" இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+