நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் ABCD கூட தெரியாது! பட்டாசாய் வெடித்த சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிடி கூட தெரியாது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
சென்னையில் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் 'கல்வி சிந்தனை அரங்கு 2025' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ், மணிப்பூர் எம்பி அங்கோம்சா அகோய்ஜாம், பாஜக எம்பி ரவீந்திர நாராயண், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன், பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்எஸ்எஸ் துணை பொதுச்செயலாளர், காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதில் சுப்பிரமணியன் சுவாமி 'விஸ்வகுரு அல்லது விஸ்வபந்து: இந்தியாவுக்கான சரியான வழி' என்கிற தலைப்பில் பேசுகையில், "இந்தியா விஸ்வகுரு, விஸ்வபந்து எனும் அந்தஸ்தை அடைய வேண்டும் எனில், அடுத்த 15 ஆண்டுக்குள் நாம் பொருளாதார, வெளியுறவு மற்றும் ராணுவக் கொள்கைகளை சரி செய்ய வேண்டும்.
விஸ்வகுரு எனில், போதிய கல்வி அறிவை பெற்றிருக்க வேண்டும். மட்டுமல்லாது நமது நட்பு நாடுகளுடன் நமது அறிவை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். விஸ்வபந்து என்றால், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு நண்பராக இருப்பது என்று அர்த்தம். இப்போது நாம் யோகா துறையிலும், நவீன தொழில்நுட்ப துறையிலும் விஸ்வகுரு என்கிற அந்தஸ்தை அடைந்திருக்கிறோம். ஆனால், நாடு பல அம்சங்களில் பொருளாதார சமநிலையற்றதாக இருக்கிறது. பல துறைகளில் நாம் இப்போது இறக்குமதியைதான் நம்பி இருக்கிறோம்.
நாம் விஸ்வகுருவாக மாறுவதற்கு ராணுவ பலம் மிகவும் முக்கியம். ஆனால் இந்தியா, சீனாவிடம் 4,064 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இழந்துவிட்டது. மட்டுமல்லாது பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அவமானப்பட்டு வருகிறது. குறிப்பாக டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் மோடி அழைக்கப்படவில்லை.
மறுபுறம் மோடியின் ஆட்சியில், கடந்த 2 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. 4 - 4.5% வரை மட்டுமே நாடு வளர்ந்து வருகிறது. ஆனால் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில், வளர்ச்சி 7-8% ஆக இருந்தது.
இந்த காலத்தில் நமது வெளியுறவுத்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் அமைச்சராக உள்ள ஜெய்சங்கர், அலுவலகத்தில் எழுத்தாளராக இருக்கக்கூட தகுதியற்றவர். அவர் மிகப்பெரிய கோமாளி. மறுபுறம் பொருளாதாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு ஏபிசிடிகூட தெரியாது" என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். அதனை தொடர்ந்து, பிப்.1ம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இது. இந்த ஆண்டு வருமான வரி குறித்த எதிர்பார்ப்பு நடுத்தர மக்களிடையே அதிகரித்திருக்கிறது. வரியை குறைக்க வேண்டும் அல்லது, வருமான வரிக்கான உச்சவரம்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் அடிப்படை கூட தெரியாது என்று சுப்பிரமணியன் சுவாமி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
வாசகர்களே, நிர்மலா சீதாராமன் பற்றி சுப்பிரமணியன் சுவாமி கூறியது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications