கியரை மாற்றிய இஸ்ரோ.. நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
சென்னை: புவியின் மேற்பரப்பை ஆய்வு செய்ய நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 743 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், இது அனைத்து காலநிலைகளிலும் நமக்கு தேவையான தகவல்களைக் கொடுக்கும்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உடன் இணைந்து புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

இந்த சாட்டிலைட் பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறது. ரூ.12,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோள், ஜி .எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.. ராக்கெட் லாஞ்சிங் தொடர்பான 27 மணி நேரம் 30 நிமிட கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications