நான் செத்து போய்ட்டேன்.. இனிமே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. கைலாசாவையும் கட்டிட்டேன்: நித்தியானந்தா
கைலாசா வேலை நிறைவடைந்துவிட்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்
சென்னை: "நான் செத்து போய்ட்டேன்.. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை அப்படித்தான்.. இனிமேல் நான் தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.. கைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்" என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிப்பவர் நித்தியானந்தா.. வழங்கப்பட்ட ஜாமீனும் ரத்தாகி விட்டது.

திரும்பவும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டும் பிடிக்கப்பட்டுள்ளது.. இவர் எங்கிருக்கிறார் என்று இன்னமும் நம் போலீசார் தேடி கொண்டிருக்கும் நிலையில், எதை பற்றியும் கவலைப்படாமல், நித்யானந்தா தினம் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் அவர் சொன்ன சுருக்கம் இதுதான்: "கைலாசத்திற்கான பணிகள் முடிந்துவிட்டன.. ஆனால் அது குறித்து வேற எந்த தகவல்களையும் தர போவதில்லை.. 20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.. சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கி விட்டன.
என்னுடைய மரணத்திற்கு பிறகு என் சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துள்ளேன்... அது தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்கு தான் சென்று சேரும்.. தமிழ்நாட்டுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை.. தமிழ்நாட்டுக்கு இனிமேல் வரப்போவதுமில்லை.. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை தான் செத்து போய்ட்டேன்.
நான் இறந்தாலும், என் உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்.. வாடிகனை போல இந்து மதத்திற்கு என ஒரு நிலத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது" என்கிறார்.. இதனால் நித்யானந்தா பக்தர்களும், விசுவாசிகளம் குதூகலமடைந்துள்ளனர்.. அந்த கைலாசா எப்படி இருக்கும், அதை பார்க்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பு எப்போது வருமோ என்றும் ஆவலுடன் காத்துள்ளனர்!!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications