சென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்!
சென்னை: நிவர் புயல் காரணமாக தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு சாலைகளில் இதனால் தற்போது தண்ணீர் தேங்கி உள்ளது.
Recommended Video

நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து இந்த புயல் 350 கிமீ தூரத்தில் உள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நெருங்க நெருங்க மழை அதிகமாக பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை
சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தற்போது மழை பெய்து வருகிறது. நேற்று முதல்நாள் மாலை சென்னையில் மழை தொடங்கியது. அப்போதில் இருந்து இப்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மட்டும் சில மணி நேரம் சென்னையில் மழை இல்லாமல் இருந்தது.

மழை
தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் மழை இரவு முழுக்க வெளுத்தெடுத்தது.

தற்போது
இந்த பகுதிகளில் தற்போதும் கனமழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளில் எல்லாம் மழை புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.

வெள்ளம்
சென்னையில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. முட்டி வரை சில ஏரியாக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. தாம்பரம், கிண்டி, பல்லாவரம், வடபழனி போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி சில வீடுகளுக்குள் சென்றுள்ளது. வேளச்சேரி மொத்தமும் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.

முன்னெச்சரிக்கை
தண்ணீர் தேங்குவதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் கூட அதீத மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்களும் விழுந்துள்ளது. சாலையில் 20 க்கும் அதிகமான மரங்கள் பல இடங்களில் விழுந்துள்ளது.

ஏரிகள்
சென்னையில் உள்ள புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகளில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி சில முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் இன்று மதியம் திறக்கப்படும்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications