லேசாக மாறும் பாதை.. ஹவருக்கு ஹவர் டிவிஸ்ட் தரும் "நிவர்".. இந்த 3ல் ஒரு இடத்தில்தான் கரையை கடக்கும்!
சென்னை: நிவர் புயல் தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த புயல் தமிழகத்தில் 3 இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நிவர் என்னும் புயலாக உருவெடுத்து உள்ளது. தீவிர புயலாக இருக்கும் நிவர் அதி தீவிர புயலாக மாற உள்ளது.
இன்று மாலைக்குள் இந்த புயல் அதி தீவிரமாக மாறும். இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டாலும் நாளை காலைதான் பெரும்பாலும் புயல் கரையை கடக்கும்.

என்ன நடக்கும்
இந்த புயல் தொடக்கத்தில் இருந்தே கொஞ்சம் குழப்பமான புயலாக இருந்து வருகிறது. முதலில் பாண்டிச்சேரி வழியாக ஆந்திர பிரதேசம் வரை செல்லும் என்று இந்த புயல் கணிக்கப்பட்டது. சென்னையில் இருந்து 400 கிமீ தூரம் இருக்கும் வரை இந்த புயலின் பாதை நன்றாகவே இருந்தது.

மாறியது
ஆனால் அதன்பின் லேசாக புயல் குழப்ப தொடங்கியது. சென்னையில் இருந்து 400 கிமீ தூரத்தில் புயல் அப்படியே நிலை கொண்டது. எங்கும் நகரவில்லை. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் புயல் எங்கும் நகராமல் அப்படியே நின்று போனது. ஆனால் அப்படி நிலை கொண்டு இருக்கும் போதே புயல் வலிமை பெற்றது.

லேசாக மாறியது
இதன் பின் புயலின் வேகத்தில் லேசாக மாற்றம் ஏற்பட்டு 5 கிமீ வேகத்தில் செல்ல தொடங்கியது. அதோடு இதன் பாதையும் லேசாக மாறியது. லேசாக மேற்கு நோக்கி நகர தொடங்கியது. இதனால் டெல்டா மாவட்டங்களை புயல் தாக்குமோ என்று அச்சம் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் வடமேற்கு திசையில் புயல் பயணிக்கிறது.

எங்கே கடக்கும்
நிவர் புயல் தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த புயல் தமிழகத்தில் 3 இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இப்போது செல்லும் திசையிலேயே சென்றால் இந்த புயல் மஹாபலிபுரம் - கல்பாக்கம் இடையே கரையை கடக்கும்.

மாற்றம்
ஆனால் லேசான காற்று மாற்றம் ஏற்பட்டு மேற்கு நோக்கி நகர்ந்தால் டெல்டா மாவட்டங்களுக்கு அருகே சென்று கரையை கடக்கும். இன்னொரு பக்கம் இந்த புயல் இப்போது செல்லும் திசையில் சென்று இன்னும் கொஞ்சம் வடமேற்கு பகுதிக்கு திரும்பினால், மொத்தமாக சென்னையில் கூட கரையை கடக்கும்.

இங்கு மூன்று இடம்
இந்த மூன்றில் ஒரு பகுதியில்தான் புயல் கரையை கடக்கும். ஆனால் இதன் பாதை குழப்பம் தருகிறது. இதனால்
கடைசி கட்டத்தில் இந்த புயல் எங்கு வேண்டுமானாலும் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications