நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்! போலீசுக்கு திரிஷா வைத்த கோரிக்கை.. ஏன் தெரியுமா?
சென்னை: தன்னை பற்றி கொச்சையாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என சென்னை போலீசாருக்கு நடிகை திரிஷா கோரிக்கை வைத்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இதில் நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் நடித்து இருந்தனர். திரைப்படம் வெளியான நிலையில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் அளித்த பேட்டி சர்ச்சையானது.

அதாவது, ‛‛லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை" என கொச்சையாக பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானை நடிகை திரிஷா காட்டமாக விமர்சனம் செய்தார். அதோடு அவருடன் இனி சேர்ந்து நடிப்பது இல்லை என அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றது.
மன்சூர் அலிகான் பேசியது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீசாருக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கோரினார். இதற்கிடையே தான் சென்னை ஆயிரம் விளக்கும் மகளிர் காவல்துறை சார்பில் நடிகை திரிஷாவிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. அதில் மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க போலீசார் அறிவுரை வழங்கி இருந்தனர்.
போலீசாரின் இந்த கடிதத்துக்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில் நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்த பிரச்சனையில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை பாய வாய்ப்பில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications