Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செய்தியாளர் கேட்ட கேள்வி.. இல்லிங்க நீங்க வேற.. கையெடுத்து கும்பிட்ட பேரறிவாளன்.. அப்படி என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று செய்தியாளர் சந்திப்பில் பேரறிவாளன் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு பதில் அளித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

Recommended Video

    Perarivalan First Speech After Release | Perarivalan Pressmeet | Oneindia Tamil

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று இதையடுத்து பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பேரறிவாளன் பேட்டி

    பேரறிவாளன் பேட்டி

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொன்னார். அப்போது பேசிய அவர்.. தொடக்க காலத்தில் என்னுடைய பக்கத்து நியாயம் வெளியே வராமல் இருந்தது. அப்படியே வந்தாலும் அது சிறிய அளவிலேயே இருந்தது. ஆனால் அதன்பின் ஊடகத்தினர் உண்மை வெளியே வர உறுதுணையாக இருந்தனர். இந்த வழக்கு நடக்கும் காலங்களில் எனக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றி.

    திருமணம்

    திருமணம்

    இதையடுத்து நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. நான் இயல்பான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. நான் இயல்பாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் சிறைக்கு செல்லும் முன் இருந்தேன். திருமணம் உள்ளிட்ட எந்த விஷயம் பற்றியும் நான் யோசிக்கவில்லை. நான் சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்.

    ஊடகத்திற்கு நன்றி

    ஊடகத்திற்கு நன்றி

    இப்போதுதான் நான் வெளியே வந்து இருக்கிறேன். வருங்கால வாழ்க்கை பற்றி யோசிக்கவில்லை. கொஞ்சம் மூச்சு விடுகிறேன். வேறு எதை பற்றியும் நான் யோசிக்கவில்லை. எனக்காக இருந்த, களத்தில் செயல்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஊடக நண்பர்கள் இல்லை என்றால் உண்மைகள் வெளியில் வந்து இருக்காது. என்று குறிப்பிட்டார்.

    துன்பமான சட்ட போராட்டம்

    துன்பமான சட்ட போராட்டம்

    நான் துன்பமான சட்ட போராட்டத்தை மேற்கொண்டேன். 31 ஆண்டுகால சிறை போராட்டத்தை ஒரு பேட்டியில் சொல்ல முடியாது. மரண தண்டனை வேண்டாம் என்பதில் தெளிவான நம்பிக்கை உள்ளவன். இதையடுத்து நீங்க அரசியல் தொடர்பாக எதுவும் பிளான் வைத்துள்ளீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். கொஞ்சம் அதிர்ச்சியாக அவரை பார்த்தவர் .. இல்லிங்க நீங்க வேற.. என்று கையெடுத்து கும்பிட்டு மறுப்பு தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+