சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத இடம் எது தெரியுமா.. எத்தனை மகிழ்ச்சியான விஷயம் பாருங்க!
சென்னை: சென்னையில் 1100-க்கும் மேற்பட்ட தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாறியுள்ள நிலையில் நகரின் தென் புறநகர் பகுதிகளில் ஒரு சாலையோ தெருவோ நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாறவில்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கொத்து கொத்தான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
அது போல் அந்த பகுதியிலிருந்து வெளியே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது போல் நோய் பரவல் அதிகமாக இருக்கும் இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாகவும் குறைந்த பரவல் இருக்கும் இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாதவையாகவும் இருந்து வருகின்றன.

மகிழ்ச்சி
சென்னை மாநகராட்சியில் அது போல் 1100 க்கும் மேற்பட்ட சாலைகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாறிவிட்டன. ஆனால் சென்னை புறநகரின் தென் பகுதியில் ஒரு நோய் கட்டுப்பாட்டு பகுதி கூட இல்லாதது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்
பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சிகளில் 34 வீடுகள் இருக்கும் தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வந்ததை அடுத்து நேற்று முதல் அப்பகுதிக்குள் நுழைவதும் வெளியே வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் 2.4 லட்சம் மக்கள் தொகை கொண்ட பல்லாவரம் நகராட்சி பகுதியில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

30 நுண் நோய் கட்டுப்பாட்டு மையங்கள்
11 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது போல் சென்னை புறநகர் மேற்கு பகுதியான ஆவடி மாநகராட்சி பகுதியில் 23 தெருக்களில் 5 முதல் 10 கேஸ்கள் உள்ளதால் அவை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டன. ஆவடியில் 30 நுண் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன.

ஆவடி
சுமார் 4.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆவடி பகுதியில் 489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத தென் பகுதிகள் என்றால் செம்பரம்பாக்கம், சிங்கப்பெருமாள்கோயில், மறைமலைநகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்டவை ஆகும்.












Click it and Unblock the Notifications