குட் நியூஸ்.. இன்று 15 மாவட்டங்களில் எந்த கொரோனா மரணமும் இல்லை.. திடீர் மாற்றம்.. எப்படி சாத்தியானது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கொரோனா காரணமாக யாருமே பலியாகவில்லை.

தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 72 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாடு கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 33005 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 4382 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 35294 ஆக உள்ளது.

எத்தனை

எத்தனை

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக அளவில் கொரோனா மரணங்கள் பதிவாகிக்கொண்டு இருந்தன. தினசரி மரணங்கள் 400க்கும் அதிகமாக பதிவாகிக் கொண்டு இருந்தது. அதிலும் கடந்த மே மாதத்தில் அதிக அளவில் மரணங்கள் பதிவானது. இதனால் தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடுமோ என்ற அச்சம் நிலவியது.

கேஸ்கள்

கேஸ்கள்

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் வேகமாக சரிந்தது. வேகமாக புதிய கேஸ்கள் குறைந்தது. ஆனால் பலி எண்ணிக்கை மட்டும் குறையாமல் 300- 400 வரை பதிவாகி வந்தது. புதிய கேஸ்கள் குறைந்தாலும், ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதி ஆகி இருந்தவர்கள் மரணம் அடைந்த காரணத்தால் பலி எண்ணிக்கை குறையாமல் இருந்தது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 200, 150 என்ற எண்ணிக்கையில் மரணங்கள் பதிவான நிலையில் இன்று 72 பேர் மட்டுமே தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அதிலும் 15 மாவட்டங்களில் இன்று கொரோனா காரணமாக யாருமே பலியாகவில்லை.

எங்கு

எங்கு

அரியலூர், செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா காரணமாக ஒருவர் கூட பலியாகவில்லை. கடந்த வார கேஸ்கள் குறைந்தது இதற்கு ஒரு காரணம் ஆகும். இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

தொடர்ந்து புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் அதிகம் ஆகியுள்ளது. இதனால் ஆக்டிவ் கேஸ்கள் 36 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதன் காரணமாக நோயாளிகளை தீவிரமாக கவனித்து அவர்களை குணமடைய வைக்க முடிகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

அதோடு பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக தினசரி கேஸ்கள் 50-100 என்ற அளவிலேயே பதிவானது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து, இருப்பவர்களை தீவிரமாக கண்காணித்து குணப்படுத்த முடிகிறது. இதனால்தான் இன்று 15 மாவட்டங்களில் எந்த மரணமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+