பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை! இந்தியா கூட்டணிக்கும் இல்லை! இனி நடக்க போகும் 8 முக்கிய விஷயங்கள்
சென்னை: 2026 லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கும் மெஜாரிட்டி இல்லை. இந்த நிலையில் இந்திய அரசியலில் நடக்க போகும் 8 முக்கிய விஷயங்கள் எவை எவை என்று பார்க்கலாம்.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 290 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
என்ன நடக்கிறது: இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம்.
உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான்.
ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. பாஜகவை ஆதரித்தாலும் மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்க கூடியவர்கள். சந்திரபாபுநாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக மோடியை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 விஷயங்கள் : 2026 லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கும் மெஜாரிட்டி இல்லை. இந்த நிலையில் இந்திய அரசியலில் நடக்க போகும் 8 முக்கிய விஷயங்கள் எவை எவை என்று பார்க்கலாம்.
1. பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் அவர்களை ஆட்சி அமைத்து மெஜாரிட்டி நிரூபிக்க சொல்லலாம். என்டிஏ ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.
2. என்டிஏ கூட்டணி அடையாளம். என் டி ஏ கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணிக்கு போகலாம்.
3. இந்த கட்சிகள் இந்திய கூட்டணிக்கு போனாலும் பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் அவர்களை ஆட்சி அமைத்து மெஜாரிட்டி நிரூபிக்க சொல்லலாம். இந்த கட்சிகளிடம் பாஜக குதிரை பேரம் நடத்தலாம்.
4. . என் டி ஏ கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணிக்கு போய் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.
5. தெலுங்கு தேசம் அல்லது ஜேடியூ வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சந்திரபாபு நாயுடு அல்லது நிதிஷ் குமார் பிரதமர் ஆகலாம்.
6. இதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை என்றால் இந்திய கூட்டணியில் இருந்து ஆட்களை தூக்க பாஜக பார்க்கும். முதலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உடன் கூட்டணி வைக்க கூட என்டிஏ முயலும்.
7. மேற்கு வங்கம் செட்டாகவில்லை என்றால் திமுக தொடங்கி மற்ற பல கட்சிகளை கூட தங்கள் கூட்டணிக்கு பெரிய பெரிய அமைச்சரவை போஸ்டுகளை கொடுத்து பாஜக அழைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது என்டிஏ கூட்டணி உடைந்தால்.
8. உதாரணமாக 2004 லோக்சபா தேர்தலில் தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. பாஜக 138 இடங்களை வென்றது. அப்போது பாஜக கூட்டணிக்கு தீவிரமாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை செய்தது. முக்கியமாக அப்போது சிபிஐ(எம்) 43 இடங்களை வென்றது. ஆனால் பாஜகவுடன் யாரும் அப்போது கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதேபோல் இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணிக்கு போக மாநில கட்சிகள் விரும்புமா என்பது சந்தேகமே. இதனால் இந்திய கூட்டணியின் ஆட்சி அமையும்.












Click it and Unblock the Notifications