“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்!
சென்னை: தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, தவெக சார்பில் இனி எந்தவொரு நிகழ்விலும் 'பேனர் கலாச்சாரம்' இருக்கக் கூடாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் உத்தரவுப்படி, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்கக் கேட்டுக்கொண்டார்.

விஜய் பிறந்தநாள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், இதனை மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமாகக் கொண்டாட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திட்டமிட்டு வந்தனர்.
இது குறித்து விவாதிப்பதற்கும், பிறந்தநாள் விழாவை நெறிப்படுத்துவதற்கும் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் என். ஆனந்த், பேனர்கள் வைக்கும் பழக்கத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். என் ஆனந்த் பேசுகையில், "நமது கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள், கட்-அவுட்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கூட்டங்களில் முதலில் சரி என்று சொல்லிவிட்டு, பின்னர் விழா நடக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கு பேனர்கள் காட்சியளிக்கின்றன. இது குறித்துக் கேட்டால், 'தொண்டர்கள் வைத்துவிட்டார்கள்' என்று நிர்வாகிகள் சாக்கு போக்கு கூறுகிறீர்கள். இனி தவெக சார்பில் நடைபெறும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலமைச்சர் விஜய்யின் கடுமையான உத்தரவின்படி, பேனர் கலாச்சாரம் என்பது நமது கட்சியில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்." என அறிவுறுத்தி உள்ளார்.
முகாம்கள்
விளம்பர அரசியல் மற்றும் ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்களின் தேவைகளை உணர்ந்து களப்பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார். முதலமைச்சரின் உத்தரவுப்படி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதுவரை இல்லாத அளவிற்குப் பெருமளவில் பின்தங்கிய மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்களை ஆங்காங்கே நடத்தவேண்டும். பசியோடு இருக்கும் எளிய மக்களுக்குத் தரமான உணவுகளை அன்னதானமாக வழங்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
தொந்தரவு கொடுக்கக் கூடாது
"முதலமைச்சர் விஜய், கட்சியின் எந்தவொரு செயல்பாடும் பொதுமக்களுக்குச் சிறு தொந்தரவாகவோ அல்லது இடையூறாகவோ அமைந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளார்" என்பதை அமைச்சர் என். ஆனந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தொண்டர்களின் உற்சாகம் மக்கள் சேவையாக மாற வேண்டுமே தவிர, அது ஆடம்பர பேனர்களாக மாறி பொதுமக்களுக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தக் கூடாது என்ற த.வெ.க தலைமையின் இந்த அறிவுறுத்தல், அரசியல் வட்டாரத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!












Click it and Unblock the Notifications