வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு தடையில்லா சான்றிதழ்.. எப்ப தெரியுமா? தமிழக அமைச்சர் முத்துசாமி சர்ப்ரைஸ்
சென்னை: வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போதும்சரி, சொத்து மீது எந்தவிதமான கடன் அல்லது சட்டச் சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் சரி, அனைத்துக்குமே தடையில்லாத சான்றிதழ் என்பது அவசியமாகும்.. மனைப்பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவே இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) என்பது ஒருவர் ஒரு செயலை நிறைவேற்ற முனையும்போது, அந்த செயலுக்கு தொடர்புடைய நபர் அல்லது நிறுவனம், அந்த செயலை நிறைவேற்றிக்கொள்ள தனக்கு தடை ஏதும் இல்லை என்று அந்நபர் சான்றிதழ் அளிப்பதாகும். இது ஒரு சட்டபூர்வமான சான்றிதழ் ஆகும்.

நிலம் உரிமையாளர்கள்
பொதுவாக, அப்பார்ட்மென்ட்களை வாங்க ஆர்வம் காட்டுவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில்தான் கட்டுகிறார்களா? சிஎம்டிஏ அனுமதி உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.
அதேபோல, திட்ட அனுமதியின்படி பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதையும், குடியிருக்க போகும் அடுக்குமாடி கட்டடம் பாதுகாப்பானது என்பதற்கான தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்றிதழ் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வருங்காலத்தில் மிகப்பெரிய சிக்கல் வரக்கூடும். எனவேதான் இதற்கெல்லாம் தடையின்மை சான்றிதழ்கள் அவசியமானதாக திகழ்கிறது.
தடையின்மை சான்றிதழ்
அதாவது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் நிலம், வீடு வாங்கியவர்கள், அதை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நினைத்தால், அதற்கு வாரியத்திடம் தடையின்மை சான்றிதழ்களை கட்டாயம் பெற வேண்டும். வாரிய திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களில், அதன் உரிமையாளர்கள் வீடு கட்ட வேண்டும் என்றாலும்கூட, இந்த தடையின்மை சான்றிதழ்களை வாங்க வேண்டும்.
இந்த தடையின்மை சான்றிதழை பெற வேண்டுமானால், கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் நிலைமை மட்டுமே இதுநாள் வரையில் நடைமுறையாக இருந்த வந்த நிலையில், சமீபகாலமாக ஆன்லைன் வசதியையும் நம்முடைய அரசு கொண்டு வந்துள்ளது..
அதன்படி, apply.tnhb-noc.com என்ற இணையதளம் வாயிலாக, பொதுமக்கள், தங்களுடைய விபரங்களை பதிவு செய்து, தடையின்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்..
வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்றைய தினம் பேசும்போது, "விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஎம்டிஏ - அடுக்குமாடி குடியிருப்பு
சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என ஒரு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டுவது கேள்விக்குறிதான். எனினும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே வாடகைக்கு குடியிருப்பவர்கள் அதை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினால், அதற்கான வழிமுறைகளை பின்பற்றி, சட்ட சிக்கல் எதுவும் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மனை உரிமையாளர்களுக்கு தடையில்லா சான்று
வாரியத்திடம் வீட்டுமனை பெற்றவர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படாதது, கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் முழுவதுமுள்ள பிரச்சனையாகும்.. எனவே, இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதற்கு முதல்வர், ''சிறு தவறும் நேராத வகையில், எல்லோருக்கும் ஒரேமாதிரியாக தீர்வு காண வேண்டும்'' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர் உதயநிதியிடமும் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகு, 2 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு நவம்பர் இறுதியில் வழங்க உள்ள அறிக்கையின் பரிந்துரைப்படி, மனை உரிமையாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications