தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மறுவாக்குப்பதிவு இல்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், மாநிலத்தில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நமது நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 102 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு: தமிழ்நாடு முழுக்க 69% வாக்குகள் பதிவானது. மாநிலத்திலேயே அதிகபட்சமாகத் தருமபுரியில் 81.48% வாக்குகள் பதிவானது. இது தவிர கள்ளக்குறிச்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்துள்ளது. தலைநகர் சென்னையில் தான் இந்த முறையும் வாக்குப்பதிவு குறைவு. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேபோல மத்திய சென்னை, தென் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது.
தேர்தல் நடந்த வெள்ளிக்கிழமை, செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு மாநிலத்தில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றதாகத் தெரிவித்தார். சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தவிரத் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவே சத்யபிரதா சாகு அறிவித்தார்.
மறுவாக்குப்பதிவு இல்லை: பொதுவாகத் தேர்தல் சமயத்தில் எதாவது ஒரு இடத்தில் குழப்பம் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவில் பிரச்சினை இல்லை என்பதால் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்த நிலையில், அதில் மாநிலம் முழுக்க வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகளும் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். இவர்கள் தான் எந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைப்பார்கள்.
அறிவிப்பு: இதற்கிடையே தேர்தல் அதிகாரிகள் எந்தவொரு இடத்திற்கு மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கவில்லை என்பதால் மாநிலத்தில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications