"தளபதி" இப்படி செஞ்சுட்டாரே'- செல்லமாக கோபித்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு அரவக்குறிச்சி,சூலூர், உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக.

அரவக்குறிச்சி தொகுதிக்கு பொன்முடி தலைமையிலும், ஒட்டப்பிடாரத்துக்கு கே.என்.நேரு தலைமையிலும், இதேபோல் திருப்பரங்குன்றம், சூலூருக்கு இ.பெரியசாமி, எ.வ.வேலு தலைமையில் பெரிய டீமையே இறக்கி விட்டுள்ளார் ஸ்டாலின்.

no rest for dmk cadres till assembly by election is over

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பிரச்சாரப் பணி மேற்கொண்டு அயர்ந்து போனதால், பலரும் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார்களாம். இதனிடையே தேர்தல் பொறுப்பாளர்கள் என அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியச்செயலாளர்கள் வரை பணி ஒதுக்கப்பட்டுள்ளதால் யாரும் நகர முடியாத நிலை.

தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் உள்ள முக்கிய நிர்வாகியை நாம் தொடர்புகொண்ட போது, சிரிச்சுகிட்டே 'தளபதி இப்படி செஞ்சுட்டாரே' என செல்லமாக கோபித்துக்கொண்டார். 'அடுத்து எங்க ஆட்சிதான், அதற்குள் ஒரு 6 நாள் வெளிநாடு செல்ல குடும்பத்துடன் திட்டமிட்டிருந்தோம்' ஆனால் முடியவில்லை என்றார்.

மேலும் இது ஒரு பொருட்டு இல்லை என்றும், தங்களது முக்கிய குறிக்கோள் ஆட்சிமாற்றம் தான், அதற்கான பணிகளில் எனக்கும் பங்களிப்பு வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+