“ரெக்கமெண்டேஷன் எல்லாம் வொர்க் ஆகாது”.. திமுக நிர்வாகிகள் நியமனம் பற்றி வெளிப்படையாக சொன்ன உதயநிதி!
சென்னை: திமுக இளைஞரணியில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். புதிய நிர்வாகிகள் எவருமே எளிதாக, பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்படவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று விருதுநகரில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மதுரை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணியின் மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளீர்கள். தேர்தலை முன்னிட்டு, மிக முக்கியமான இந்தத் தென்மண்டலச் சந்திப்பை நாம் நடத்த இருக்கின்றோம்.
இளைஞர் அணியைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சியும் இளைஞர் அணிக்கு வலு சேர்க்கும் விதத்திலும், அதே நேரத்தில் கழகத்திற்கு இன்னும் கூடுதல் வலிமை சேர்க்கும் விதத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனமாகத் திட்டமிட்டுச் செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற வட மண்டல நிர்வாகிகள் சந்திப்பை மிகப்பெரிய ஒரு வெற்றிச் சந்திப்பாக, நடத்திக் காட்டினோம்.
ஏற்கனவே நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்டை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் மிகச் சிறப்பாக, மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக் காட்டினோம். அந்த மாநாட்டின் வெற்றிக்காக இங்கு வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உழைப்பை, நூறு சதவிகிதம் வழங்கியுள்ளீர்கள். இதனைத் தொடர்ந்து இளைஞர் அணியின் சார்பில் தற்போது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, இந்தத் தெற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முரசொலியில் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை 47 தொகுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய நிர்வாகிகள் எவருமே எளிதாக, பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்படவில்லை. மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்களிடம் பரிந்துரை பெறுகிறோம்.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அன்பகத்திலிருந்து ஒரு குழு அமைக்கப்பட்டு, நாங்களே ஒவ்வொருவரையும் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் பின்னணி, கழக ஆர்வம், கொள்கைப் பிடிப்பு ஆகியவற்றைச் சரிபார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டைக் கணக்கில் கொண்டுதான் தொகுதி வாரியாக அறிவிப்புகள் வெளிவருகின்றன. அவர்களை எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிக்கு அவர்களைத் தயார் செய்வதுதான் இந்த நிர்வாகிகள் சந்திப்பின் நோக்கம்.
நம் கழகத்தின் கொள்கைகளை, அரசின் சாதனைகளை உள்வாங்கி கழகப் பணியை வலிமையோடு செய்ய வேண்டும் என்பதே இச்சந்திப்பின் ஒரே நோக்கம். இந்தச் சந்திப்பு, தேர்தல் நேரத்தில் நடைபெற்றாலும், அது தேர்தலுக்குப் பயனுள்ள ஒரு கூட்டமாகவே அமையும். ஆனால், அது மட்டுமே நம்முடைய இலக்கல்ல. எதிர்காலத்தில் கழகத்திற்கு மேலும் பல இளைஞர்களை அழைத்து வந்து வலிமை சேர்க்கும் ஒரு பாசறைக் கூட்டமாக இச்சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நம்முடைய தெற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி. 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டும். வெல்வோம் 200, படைப்போம் வரலாறு எனத் தெரிவித்துள்ளார்.
-
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்!












Click it and Unblock the Notifications