சென்னையில் ரூ.270 கோடியில் R&D சென்டரை திறந்த நோக்கியா! பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் தமிழ்நாடு!
சென்னை: உலக அளவில் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா, தமிழ்நாட்டில் தனது மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தைத் திறந்துள்ளது. ரூ.270 கோடி முதலீட்டில் திறக்கப்பட்டிருக்கும் இந்த மையம், சுமார் 200 பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும்.
கடந்த 2024ம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, தமிழக அரசுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மையம் உருவாக்கப்பட்டது. இந்த மையம் 10G முதல் 100G வரை ஆப்டிகல் நெட்வொர்க்குகள், ஃபிக்சட் வயர்லெஸ் ஆக்சஸ் போன்ற தொழில்நுட்பங்களில் புதுமைகளை இங்கு சோதனை செய்து பார்க்கிறது.

திட்டத்தின் முதல் கட்ட முதலீடு ₹220 கோடியில் இருந்து ₹270 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்திற்கு சுமார் ₹300 கோடி ஒதுக்கப்படும். இந்த மையம் 200க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில், நோக்கியா ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் 5G ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் துறையில் வணிக ஒப்பந்தங்களை கொண்டுள்ளது.
சிறுசேரி மையத்தில், நோக்கியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் R&D ஆய்வகம் செயல்பட்டு, மேம்பட்ட பிராட்பேண்ட் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது. தற்போது, தமிழகத்தில் நோக்கியாவில் சுமார் 1,000 பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.
சிறுசேரி மையம் என்பது, இது உலகம் முழுவதும் உள்ள நோக்கியாவின் ஃபிக்ஸட் நெட்வொர்க் பிரிவிற்கான முதன்மை ஆராய்ச்சி மையமாகச் செயல்படும். 10G, 25G, 50G மற்றும் 100G வரையிலான மிக அதிவேக ஆப்டிகல் நெட்வொர்க் (Broadband) தொழில்நுட்பங்கள் இங்குதான் சோதிக்கப்பட்டு உருவாக்கப்படும்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications