காத்திருந்த அதிகாரிகள்.. சுயேச்சை உட்பட.. வேலூர் மாவட்டம் முழுக்க ஒரு வேட்புமனு கூட தாக்கல் இல்லை
சென்னை: வேலூர்மாவட்டத்தில் காட்பாடி வேலூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுதாக்கலுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் யாரும் வரவில்லை
Recommended Video
தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் துவங்கியது. எனவே, வேலூர் மாவட்டம்,வேலூர், அனைக்கட்டு,காட்பாடி,குடியாத்தம் கேவிக்குப்பம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கலும் இன்று துவங்கியது.

இதில் வேலூர் தொகுதிக்கு வேலூர் வட்டாச்சியர் அலுவலகமும்,காட்பாடிக்கு காட்பாடி வட்டாச்சியர் அலுவலகமும் ,கேவிகுப்பம் வட்டாச்சியர் அலுவலகமும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு பேர்ணாம்பட்டு வட்டாச்சியர் அலுவலகமும், அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு அனைக்கட்டு வட்டாச்சியர் அலுவலகத்திலும் வேட்புமனுதாக்கல் இன்று துவங்கியது.

ஆனால் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அதிகாரிகள் காத்திருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது ஏற்கனவே அதிமுக மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தனர் திமுக தற்போதுதான் அறிவித்தனர். முதல் நாளில் சுயேட்சைகள் கூட யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications