நடிகை பாலியல் பலாத்கார வழக்கில்.. வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார் சீமான்!
சென்னை: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இந்த சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகச் சீமான் இப்போது வளசரவாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
நடிகை ஒருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். சீமான் மீதான இந்தப் புகாரை சம்பந்தப்பட்ட நடிகை திரும்பப் பெற்றுவிட்டார். ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் உள்ள அந்த நடிகையின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கு சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கிருந்து வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ளனர். நடிகை பாலியல் வழக்கில் சீமான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒத்துழைக்காவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீமான் வீட்டில் நேற்று சம்மன் ஒட்டப்பட்டது
ஆனால், ஒட்டப்பட்டவுடனேயே அந்த சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளருக்கும், சீமான் வீட்டு காவலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸார் மற்றும் காவலாளிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை போலீஸார் கேட்ட நிலையில் அவர் தர மறுத்தார். ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்குமேல் தூக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியூர் நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டு இருந்ததால் காலை ஆஜராகவில்லை. மாலை விமானம் மூலம் சீமான் சென்னை திரும்பிய நிலையில், அவர் இப்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications