Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? சீமானுக்கு ஆதரவாக வந்த வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழக அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முதல் அவர் போட்டியிட்டு வருகிறார். அதிரடியான ஆக்ரோஷமான பேச்சுக்களால் சீமானின் குரல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதாக உள்ளது.

NTK Chief Seeman Twitter page withhold issue - vairamuthu slams

தேர்தலில் யாருடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்தது இல்லை. ஆனாலும் அதன் வாக்கு வங்கி மெச்சும் அளவுக்கு உள்ளது. இனி வரும் தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சனம் செய்து வருவார். அது போல் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைப்பதை கடுமையாக கண்டித்த சீமான், மீறி சிலை வைத்தால் அந்த பேனாவை உடைப்பேன் என்றார்.

அது போல் மக்கள் நல பிரச்சினைகளுக்கும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுப்பார். தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்திலும் தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நேற்று திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கு பக்கத்தில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது போல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், எனவே தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டிற்கு பதக்கம் வாங்கி கொடுத்த வீராங்கனைகளை தெருவில் நிற்க வைத்தது குறித்து கேள்வி கேட்டதற்காக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான். ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் சீமானின் ட்விட்ட பக்கம் முடக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கை கால்களைக் கட்டாதீர்கள்.. கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+