தந்தைக்கு உச்சம் பெற்ற 9 கிரகங்கள்.. மகனுக்கு உச்சம்பெறவில்லையோ... தவறிப்போன அமைச்சர் வாய்ப்பு
Recommended Video
சென்னை: ஒன்பது கிரகங்களும் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு உச்சம் பெற்ற காரணத்தால் முதல் முறை எம்எல்ஏ ஆனபோது தமிழகத்தின் முதல்வர் ஆனார். இப்போது அவரது மகன் முதல் முறை எம்பியான போதிலும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
1995-96களில் பெரியகுளத்தில் நகராட்சி தலைவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஓ .பன்னீர்செலவம். 1998ம் ஆண்டு டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அங்குவந்தார்.
அப்போது அவருடன் நெருக்கமான பன்னீர் செல்வம் தீவிரமாக வேலை செய்தார். 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரியகுளம் எம்பியாக டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பணி பிடித்து போகவே ஜெயலலிதாவின் அறிமுகமும் ஒ பன்னீர்செல்வத்துக்கு கிடைத்தது.

போட்டியிடாத ஜெயலலிதா
இதனால் 2001ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வென்றார் ஒ பன்னீர்செல்வம் அப்போது ஜெயலலிதாவுக்கு 4 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்த சர்ச்சை மற்றும் வழக்கு சர்ச்சை காரணமாக போட்டியிட முடியவில்லை. இதனால் ஒ பன்னீர்செல்வம் 2001ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக முதல்வரானார். அதன் பின்னர் 2002ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் நின்று ஜெயலலிதா வென்று முதல்வரானார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்
அதன்பிறகு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும், முதல்வராகவும், இருந்த ஒ பன்னீர்செல்வம், தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இத்துடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

2014ல் ஏமாற்றம்
தனது தந்தையைப்போல் அரசியல் களத்தில் குதித்த அவரது மகன் ரவீந்திரநாத், கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டே தேனி தொகுதி எம்பி தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பார்த்திபனுக்கு கிடைத்தது. ஆனால் 2019ம் ஆண்டு ரவீந்திரநாத்துக்கு கிடைத்துவிட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஒபி ரவீந்திரநாத், தேனியில் வெற்றியும் பெற்றார்.

தந்தையைப்போல் அதிர்ஷ்டம்
அவரது தந்தை ஒ பன்னீர்செல்வம் எப்படி முதல் முயற்சியிலேயே முதல்வர் என்ற பொறுப்பை அதிர்ஷ்டவசமாக பெற்றாரோ, அதேபோல் தான் ரவீந்திரநாத் அமைச்சராகவும் வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் யாரும் வெல்லாத நிலையில் வென்றது ரவீந்திரநாத் மட்டுமே என்ற நிலையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தவறிப்போன வாயப்பு
ஆனால் அவரது தந்தைக்கு உச்சம் பெற்ற கிரகங்கள் , ரவீந்திரநாத் உச்சம் பெறவில்லையோ என்று தோன்றுகிறது. ஏனெனில் அவருக்கு மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications