ஓபிஎஸ்க்கு இரட்டை இலையா? கட்சியை அழிக்க பார்க்கிறார்.. அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று ஓ பன்னீர் செல்வம் பேசிய நிலையில், தொண்டர்களை குழப்பவே ஓ பன்னீர் செல்வம் இப்படி பேசியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
லோக்சபா தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போதே அரசியல் கட்சிகள் இதற்காக ஆயத்தமாகி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக திமுக கட்சிகள் இடையே தான் நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளதால் பாஜகவு தனித்தே போட்டியிட இருக்கிறது.

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிருகிறது. இதுபோக டிடிவி தினகரனின் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க ஓ பன்னீர் செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அறிவித்ததில் இருந்தே ஓ பன்னீர் செல்வம் பாஜகவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார். பிரதமர் மோடியை சந்திக்க இருமுறை ஓ பன்னீர் செல்வம் முயற்சித்தார். இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை ஓ பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு ஓ பன்னீர் செல்வம் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:- வரும் சோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம். மேலும் வரும் 11 ஆம் தேதி ஜே பி நட்டாவை சந்திக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்புகளின்படி அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ பன்னீர் செல்வம் பயன்படுத்த முடியாத நிலையில், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தான் ஓபிஎஸ் இப்படி பேசியிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், "தொண்டர்களை குழப்ப ஓ பன்னீர் செல்வம் முயற்சிக்கிறார். அதிமுக தொண்டர்களை குழப்பவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். தொண்டர்களை குழப்பி கட்சியை அழிக்க ஓபிஎஸ் முயற்சிக்கிறார் என்பதை தொண்டர்களே தற்போது உணர்ந்துள்ளனர்" என்று கூறினார்.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications