காவி வேட்டியில் ஓ.பன்னீர்செல்வம்! சாமியார் தோற்றத்தில் சட்டசபைக்கு வருகை! கட்சி வேட்டி என்னாச்சு?
சென்னை: இன்று நடைபெற்ற சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி கரை வேட்டிக்கு பதில் காவி வேட்டி கட்டிக்கொண்டு சாமியார் தோற்றத்தில் சட்டசபைக்கு வந்திருந்தார்.
ஆனால் அவருடன் சட்டசபைக்கு வந்திருந்த அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான உசிலம்பட்டி மகேந்திரன், ஒரத்தநாடு வைத்திலிங்கம், ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எப்போதும் போல் அதிமுக கரை வேட்டியை அணிந்து வந்திருந்தனர்.

அதிமுகவின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு சென்றிருக்கிறது. இந்நிலையில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பெற்ற சட்டமுன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் விதமாக சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடர் இன்று அவசரமாக கூட்டப்பட்டது.
அதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வழக்கமாக கட்டும் அதிமுக கட்சி கரை வேட்டியை தவிர்த்துவிட்டு காவி வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபை வந்திருந்தார். நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை மீறினால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகலாம் என்பதால் தான் ஓ.பி.எஸ். காவி வேட்டியை தேர்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கரை வேட்டி கட்ட முடியாமல் செய்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பூரிப்புடன் இருந்ததை பார்க்க முடிந்தது.
ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபைக்கு வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல முறை இதே போல் காவி வேட்டியுடன் அவர் சபை நிகழ்வுகளில் பங்கேற்ற வரலாறு உண்டு. ஓ.பன்னீர்செல்வம் ஆன்மிக காரணங்களுக்காக தான் அதிமுக கரை வேட்டியை தவிர்த்து காவி வேட்டிக் கட்டிக்கொண்டு வந்தார் என்றும் மற்றபடி வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் அவரது தரப்பு சமாளித்து வருகிறது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மூலம் தனக்கு கட்சிக்கொடி, சின்ன விவகாரத்தில் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை உடைப்பதற்கான முயற்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications