கோரமண்டல் ரயில் விபத்து: தமிழக பயணிகள் 140 பேர் நிலை என்ன? அதிகாரிகள் கொடுத்த பரபர தகவல்
சென்னை: சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது. இந்த ரயிலில் பயணம் செய்த தமிழக பயணிகள் எத்தனை பேர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், 140 பேரின் விவரங்கள் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கொல்கத்தாவின் ஷாலிமார் இடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கபப்டுகிறது. இந்த ரயில் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல் கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தின் மீது மோதியது.
இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்தன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் 140 பேர் பயணித்த தகவல் கிடைத்திருப்பதாக பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் கூறினார்.

இது பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் கூறியதாவது:- சென்னை நோக்கி வந்த பயணிகள், தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் யார் யார் என்று பார்த்தோம். அதில் சுமார் 140 பயணிகளின் விவரம் கிடைத்தது. அவர்களை தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டதில் 90 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
10 முதல் 12 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 15 பேர் அந்த ரயிலில் ஏறவில்லை. விபத்து நடைபெற்ற ஸ்டேஷனுக்கு பிறகு உள்ள ரயில் நிலையங்களில் இருந்த இந்த பயணிகள் ரயிலில் ஏறவில்லை. சில பேரின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆப்பில் உள்ளது. இது முதல் கட்ட பணிதான்" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications