ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கும் தெற்கு ரயில்வே பிறப்பித்த உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு ஒரு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகளின் மத்திய பாஜக அரசு ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் தான் ‛‛தெற்கு ரயில்வே அலுவலக பணிகளில் 'ஹிந்தி' மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்'' என, அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே தமிழகத்தின் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த தெற்கு ரயில்வேயில் 90,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் கணிசமான அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

சமீபகாலமாக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் தெற்கு ரயில்வேயில் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் பேசாமல் ஹிந்தியில் மட்டுமே பேசுவதாகவும் புகார்கள் உள்ளன. ஹிந்தி பேசுவதால் தமிழக மக்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக பல இடங்களில் போராட்டங்களும் நடந்துள்ளது.
இப்படியான சூழலில் தான் தெற்கு ரயில்வேயின் அலுவலக பணிகளில், ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛ரயில்வே அலுவலக பணிகளில், 'ஹிந்தி' மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19ம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். தெற்கு ரயில்வே அலுவலக பணியில் ஹிந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் சேவைகளில் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் இடம்பெற செய்ய வேண்டும். டிக்கெட் கவுன்ட்டர்கள், அலுவலக ஆவணங்கள், உள்ளறிக்கை, உத்தரவுகளில் ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். இதில் பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியம் ஹிந்தி மொழி முன்னெடுப்பின் நிறைவில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விபரத்தை, துணை பொது மேலாளருக்கு அனுப்ப வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications