சௌமியா அன்புமணிக்கு சொந்தமான ஐஸ் ஃபேக்டரிக்கு சீல்.. இதுவரை வாடகையே கட்டலையா? பரபர தகவல்!
சென்னை: சென்னை காசிமேட்டில் அமைந்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியாவின் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இடத்தில் இயங்கும் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு வாடகை பாக்கியை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி. இவர் சென்னை காசிமேட்டில் சுமித்ரா ஏஜென்சி என்ற பெயரில் ஐஸ் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். சௌமியா அன்புமணி நடத்தி வரும் இந்த ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வாடகை பாக்கி நிலுவை புகாரில் சௌமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் ஐஸ் பேக்டரிக்கு 2008 ஆம் ஆண்டு முதல் வாடகை பாக்கி என புகார் எழுந்துள்ளது.
ரூ.38 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைக்க வந்துள்ளனர். அப்போது ரூபாய் 5 லட்சம் மட்டும் வாடகை செலுத்தியுள்ளனர். மீதி பாக்கி தொகையை ஒரு வாரத்தில் செலுத்துவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் சீல் வைக்காமல் சென்றுள்ளனர். இதுவரை மீதமுள்ள 33 லட்சம் ரூபாய் வாடகை தொகையை செலுத்தாத நிலையில், இன்று சௌமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications