சௌமியா அன்புமணிக்கு சொந்தமான ஐஸ் ஃபேக்டரிக்கு சீல்.. இதுவரை வாடகையே கட்டலையா? பரபர தகவல்!
சென்னை: சென்னை காசிமேட்டில் அமைந்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியாவின் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இடத்தில் இயங்கும் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு வாடகை பாக்கியை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி. இவர் சென்னை காசிமேட்டில் சுமித்ரா ஏஜென்சி என்ற பெயரில் ஐஸ் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். சௌமியா அன்புமணி நடத்தி வரும் இந்த ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வாடகை பாக்கி நிலுவை புகாரில் சௌமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் ஐஸ் பேக்டரிக்கு 2008 ஆம் ஆண்டு முதல் வாடகை பாக்கி என புகார் எழுந்துள்ளது.
ரூ.38 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைக்க வந்துள்ளனர். அப்போது ரூபாய் 5 லட்சம் மட்டும் வாடகை செலுத்தியுள்ளனர். மீதி பாக்கி தொகையை ஒரு வாரத்தில் செலுத்துவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் சீல் வைக்காமல் சென்றுள்ளனர். இதுவரை மீதமுள்ள 33 லட்சம் ரூபாய் வாடகை தொகையை செலுத்தாத நிலையில், இன்று சௌமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications