சென்னையில் மற்றொரு ஷாக் சம்பவம்! முதியவர் மீது பாய்ந்து குடலை உருவிய மாடு.. பொதுமக்கள் அச்சம்
சென்னை: சென்னையில் மாடு முட்டியதில் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடுகளால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையின் மக்கள் தொகை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கிறதா? என்று கேட்டால் போதுமான அளவு இல்லை என்றே பதில் வருகிறது. மக்களுக்கே இருக்க இடம் இல்லாதபோது கால்நடைகள் வளர்ப்பதற்கு என்று தனியாக இடம் ஒதுக்குவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இப்படியான சூழலில்தான் சென்னையில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் மாடுகளின் நடமாட்டத்தை தவிர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது அடிக்கடி விபத்துகளையும் உருவாக காரணமாக அமைந்துவிடுகிறது. அதாவது, கடந்த மாதம் சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி பள்ளியை முடித்துக்கொண்டு மாணவி தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று மாணவி மீது பாய்ந்தது. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேல் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவியின் முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாட்டை விரட்டியதையடுத்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் மாடுகளை வீதிகளில் திரிய விடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் கறாராக உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இந்த உத்தரவை யாரும் சரியாக பின்பற்றுவதாக தெரியவில்லை. எனவே மற்றொரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அதாவது நேற்றிரவு நங்கநல்லூரில் கண்ணன்(51) என்பவர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை மாடு ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் கண்ணனின் வயிறு கிழிக்கப்பட்டு குடல் வெளியே வந்திருக்கிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் கண்ணன் அங்கே துடிதுடித்து விழுந்திருக்கிறார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் கண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அரும்பாக்கத்தில் இது போன்ற சம்பவம் நடந்தபோது மாநகராட்சி உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இன்று இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடந்திருக்காது என்று மக்கள் கூறியுள்ளனர்.
உழவர் சந்தையில் மீதியாக இருக்கும் காய்கறிகளை சாப்பிட மாடுகள் இந்த இடங்களில் அதிக அளவு உலவுகின்றன. இரவு நேரங்களிலும், பகல் நேரங்களில் சில தருணங்களிலும் மாடுகள் இது போன்று பொதுமக்கள் மீது பாய்வது வழக்கமாக நடந்து வருகிறது. எனவே மாடு வளர்ப்போர் அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications