கியாஸ் சிலிண்டர் தீரப் போகுதா.. தீபாவளி நேரத்தில் சிக்கல்.. ஆயில் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை எடுத்து செல்லும் பணியை ஒப்பந்த அடிப் படையில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9ம் தேதி தொடங்கி காலவரையற்ற போராட்டம் நடந்து வருகிறது. தீபாவளி நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி கியாஸ் சிலிண்டர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை எடுத்து செல்லும் பணியை ஒப்பந்த அடிப் படையில் டேங்கர் லாரிகள் மேற்கொள்கின்றன. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தான் இந்த பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த அக்டோபர் 9ம் தேதி அறிவித்தது.

வேலை நிறுத்தம்
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி உட்பட தென் மண்டலத்தில் உள்ள 5 முதல் 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அபாயம் எழுந்தள்ளது. அவர்களின் என்னவென்றால், புதிய ஒப்பந்த விதிகளில் (2025-2030 காலத்திற்கான) சில டேங்கர் லாரிகளுக்குப் பணி அனுமதி மறுக்கப்படுவதைத் திருத்த வேண்டும், குறிப்பாக தகுதியான அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே உரிமையாளர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
லாரி உரிமையாளர்கள் கோரிக்கை என்ன
இன்னும் தெளிவாக சொல்வது என்றால், 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரியில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
தட்டுபாடு ஏற்படும் அபாயம்
இதன் காரணமாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் மையங்களுக்குஎல்பிஜி கொண்டு செல்லும் பணி தடைப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்ந்தால், தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டலம் முழுவதும் தடையில்லா சமையல் கியாஸ் வினியோகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஆயில் நிறுவனங்கள் தரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிவித்திருக்கிறது.
கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம்
இதுசம்பந்தமாக ஆயில் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில் "இந்த வேலைநிறுத்தம் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டு உள்ளது. இது, சட்டவிரோ தமானது. தற்போதைய பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்ய அனைத்து ஆலைகளிலும், வினியோகஸ்தர்களிடமும் இண்டேன், பாரத், எச்.பி. கியாஸ் சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆயில் நிறுவனங்கள், தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து தடையற்ற கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை உறுதி செய்ய அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு! -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
பாரத் கேஸ்.. சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லையா.. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications