Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்தமிழக பயணிகளே கவனம்.. சென்னை கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் - புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி தென்தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் சென்னை கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்கப்படும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

koyambedu omni bus

இதனை தடுக்க கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையம் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பிறகு கோயம்பேடு பஸ் நிலையம் மூடப்பட்டது. அனைத்து பஸ் சேவைகளும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் போதவில்லை. இதையடுத்து முடிச்சூரில் கட்டப்பட்ட பஸ் நிலையம் ஆம்னி பஸ்களுக்கு வழங்கப்பட்டது. அங்கும் 150 பஸ்களுக்கு மட்டுமே இடம் உள்ளது. இதனால் கோயம்பேட்டில் இருந்து மீண்டும் ஆம்னி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தான் கோயம்பேடு மற்றும் போரூரில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுபற்றி அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தை முதல்வர் நேற்று முன்தினம் (டிச.06) திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம். ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன் படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இசிஆர் சாலை வழியாக புதுச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு இயக்கப்படும். மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் இசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றி செல்கிறோம். இந்த பேருந்து நிலையம் அந்த பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைக்கும் பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத் தென்பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+