Lockdown: தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கம்.. உரிமையாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் மேற்கண்ட ஒரு வாரத்திற்கு காய்கறி, மளிகை, பழக்கடைகள் இயங்காது. இதையொட்டி இன்றும் நாளையும் கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். எனவே பொதுமக்கள் முண்டியடித்துக் கொள்ளாமல் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளலாம்.
அது போல் இன்றும் மாலையும் தமிழக அரசு சார்பில் வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரங்களில் இருந்து கோயம்பேடு செல்லவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சுமார் 4300 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்றும் நாளையும் இரவு நேரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.