ரூ.1000-யை செலவு செய்வது எப்படி? சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் துரை முருகன்.. ஆளுநரிடம் பரபர புகார்
சென்னை: அரசு வழங்கும் ரூ.1000-யை பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோ வெளியாக விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அமைச்சர் துரைமுருகன் மீது நடவடிக்கை கோரி ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரபரப்பான புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் துரை முருகன். நீர்ப்பாசனம் மற்றும் கனிம வளத்துறையை அவர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் துரை முருகன் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

அதாவது வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் துரை முருகன் பேசிய 40 வினாடி ஓடும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் குடும்ப பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றி சில விஷயங்களை அவர் பேசியுள்ளார்.
இதுபற்றி துரை முருகன், ‛‛செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு ரூ.1000 கொடுக்க போகிறோம். நீங்களே உங்கள் செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவர்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். எனவே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம்'' என்றார்.
மேலும், ‛‛உங்கள் பெண் வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்சுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என்று அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்'' என பேசி இருந்தார்.
இந்த பேச்சு தான் சர்ச்சையை கிளப்பியது. பெண்கள் மற்றும் மாணவிகள் பற்றி தவறான நோக்கத்தில் பேசிய அமைச்சர் துரை முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தான் அமைச்சர் துரை முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான பெரம்பூரை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் ஆளுநர் ஆர்என் ரவி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி உள்ளார். இதுதொடர்பான புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு வழங்கும் ரூ.1000-யை கல்லூரி மாணவிர், பெண்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் அமைச்சர் துரை முருகன் இதுபற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். பெண்களுக்கான மரியாதை குறைக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. இதுபற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து துரை முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கும் பதிவு செய்ய வேண்டும். அதோடு இந்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!











Click it and Unblock the Notifications