நடிகை கவுதமியிடம் நிலமோசடி.. தலைமறைவான நபரை தட்டித்தூக்கிய போலீஸ்.. யார் இந்த பலராமன்?
சென்னை: நடிகை கவுதமியின் சொத்தான நிலத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நடிகை கவுதமி பாஜகவில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் திடீரென்று அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு தனது சொத்துகளை சிலர் மோசடி செய்து விற்பனை செய்துவிட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

குறிப்பாக பாஜகவை சேர்ந்த நிர்வாகி மீது அவர் குற்றம்சாட்டியதோடு, இந்த விவகாரத்தில் பாஜக கட்சி தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அதாவது தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, பவர் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி பாஜகவைச் சேர்ந்த கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விற்றுவிட்டதாக கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் அபகரித்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அழகப்பனை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அழகப்பனை தீவிரமாக தேட தொடங்கினர். மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரது பெயர் பலராமன். வயது 64 ஆகும். இவர் நடிகை கவுதமியின் சொத்தை அதிக விலைக்கு விற்று அவருக்கு குறைந்த பணத்தை மட்டுமே வழங்கி ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
அதாவது திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.16 கோடி விற்பனை செய்த அவர் கவுதமிக்கு வெறும் 4.10 கோடி மட்டும் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த நடிகை கவுதமி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications