சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னை சாலிகிராமத்திலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டம் 2 மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் வண்ணாரப்பேட்டையில் தொடர்ச்சியாக 3-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெறுகிறது.
தற்போது சென்னை சாலிகிராமத்திலும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசு சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications