லோக்சபா+சட்டசபை, உள்ளாட்சி.. 2 கட்டங்களாக ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை 2 கட்டங்களாக அதாவது லோக்சபா, சட்டசபைக்கு ஒரே நேரத்திலும் அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாகவும் நடத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த பரிந்துரைக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.

ஒரே நேரத்தில் தேர்தல்: உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள்
1. 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
2. சட்ட ஆணையம்: 170 வது அறிக்கை (1999): ஐந்து ஆண்டுகளில் லோக்சபா மற்றும் அனைத்து சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல்.
3. நாடாளுமன்றக் குழுவின் 79-வது அறிக்கை (2015): ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தல்.
4. ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, அரசியல் கட்சிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தியது.
5. இந்த அறிக்கை ஆன்லைனில் கிடைக்கிறது:https://onoe.gov.in
6. நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பரவலான ஆதரவு இருப்பதாக விரிவான பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
பரிந்துரைகள் மற்றும் செயல்படுத்த செல்லும் வழி
- ஒரே நாடு ஒரே தேர்தல் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவும்.
- முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
- இரண்டாம் கட்டமாக பொதுத் தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்த வேண்டும்.
- அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் நாடு முழுவதும் விரிவான விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
- ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications