தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு- 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை
சென்னை: தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்காக 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,549 ஆகும். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 69.

கொரோனா மாவட்ட பாதிப்பு
சென்னையில் 1157; திருவள்ளூரில் 526 ; மதுரையில் 267; வேலூரில் 253; திருவண்ணாமலை 212; விருதுநகர் 145; செங்கல்பட்டு 179; திண்டுக்கல் 126; கன்னியாகுமரி 146 பேருக்கு என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த மரணங்கள் எண்ணிக்கை 2,236
கொரோனா மரணங்களில் சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பிற மாவட்டங்களில் 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். மதுரையில் 5; திருவள்ளூரில் 7 ; வேலூரில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை மொத்தம் 2,236 ஆக அதிகரித்திருக்கிறது.

அதிகரித்த டிஸ்சார்ஸ் எண்ணிக்கை
அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகி இருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 5,106 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையானது மொத்தம் 1,07,416 ஆக உள்ளது.

46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை
சென்னையில் 1712; செங்கல்பட்டு 262; கோவை 256; கடலூர் 54; கள்ளக்குறிச்சி 79; காஞ்சிபுரம் 239; மதுரை 679; திருவள்ளூர் 450; வேலூர் 246 என ஒவ்வொரு மாவட்டத்திலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதித்தவர்கள், உயிரிழந்தோர், வீடு திரும்பியவர்கள் அடிப்படையில் தற்போதைய நிலையில் மொத்தமே 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications