நீட் தேர்வு அரை மணிநேரம் மட்டுமே எழுத விட்டனர்... டாக்டர் கனவு பாழாகி விட்டது - மாணவி கண்ணீர்
உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறி தனிமைப்படுத்தி கண்காணித்ததால் அரைமணி நேரமே நீட் தேர்வு எழுதியதாக மாணவி ஒருவர் தேசிய தேர்வு முகமைக்கு புகார் அனுப்பியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வு எழுத சென்ற போது உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறி தனிமைப்படுத்தியதால் அரைமணி நேரம் மட்டுமே தேர்வு எழுத முடிந்ததாக மாணவி ஒருவர் தேசிய தேர்வு முகமைக்கு புகார் அனுப்பியுள்ளார். டாக்டராக வேண்டும் என்று நினைத்தேன் மன உளைச்சலில் சரியாக தேர்வு எழுத முடியாமல் போய்விட்டதாக கூறியுள்ளார் அந்த மாணவி.
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா. டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். கொரோனா அச்சத்திற்கு இடையேயும் தைரியமாக தேர்வு எழுத சேத்துப்பட்டில் உள்ள மையத்திற்கு வந்த நிவேதிதாவிற்கு சோதனை காத்திருந்தது. வெப்பப்பரிசோதனை செய்யப்பட்டபோது பீப் சவுண்ட் கேட்டதால் அதிக வெப்பம் இருப்பதாக கூறி தனிமையில் நிற்க வைக்கப்பட்டார்.

நேரம் செல்லச்செல்ல நிவேதிதான் மனதில் படபடப்பு அதிகமானது. மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு 4.22 மணிக்குதான் நிவேதிதா தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். அரை மணிநேரத்தில் என்ன எழுத முடியும் தன்னுடைய மருத்துவ கனவு பாழகி விட்டதாக கூறியுள்ளார் மாணவி நிவேதிதா.
உடல் வெப்பநிலை சீராக இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. 45 கேள்விகள் மட்டுமே தன்னால் எழுத முடிந்ததாக கூறியுள்ளார் நிவேதிதா. ஒராண்டாக காத்திருந்த நிலையில் தன்னுடைய மகளின் மருத்துவ கனவு பாழாகி விட்டதாக கூறியுள்ளனர் மாணவியின் பெற்றோர். பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
வயசான காலத்துல நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பிடிச்சதை செஞ்சோம்... சேர்ந்து செஞ்சோம்
மாணவியின் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள தேர்வு முகமைக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியுள்ளார். நீட் தேர்வு சோதனைகளே மாணவ மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில் காத்திருக்க வைத்து அரை மணிநேரம் மட்டுமே எழுத நேரம் கொடுத்து மாணவியின் மருத்துவ கனவில் மண் அள்ளிப்போட்டு விட்டனர். மருத்துவ படிப்பில் சேர இன்னும் ஓராண்டு காலம் அந்த மாணவி காத்திருக்க வேண்டும் என்பதுதான் கொடுமை. மாணவியை மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications