வச்சாங்க ஆப்பு.. 2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே சரக்கு கிடைக்கும்: தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?
சென்னை: இரண்டு டோஸ் கொரோனா வேக்சின் செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது கொடுக்கப்படும் என்று தமிழ்நாட்டில் ஒரு மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேக்சின் போடும் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக வேக்சின் வரத்து அதிகம் ஆகியுள்ளதால் மக்களுக்கும் துரிதமாக வேக்சின் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 3,34,78,851 பேருக்கு வேக்சின் கொடுக்கப்பட்டுள்ளது.
2,68,02,610 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 66,76,241 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வேக்சின் போடுவதற்கான அவசியம் அதிகம் ஆகியுள்ளது .

நீலகிரி
தமிழ்நாட்டில் அதிகம் வேக்சின் போடப்பட்ட மாவட்டங்களில் நீலகிரியும் ஒன்றாகும். நீலகிரி மாவட்டத்தில் 97% பேர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ள நிலையில் மீதமுள்ள மூன்று சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 5,75,510 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

நீலகிரி மக்கள் தொகை
நீலகிரியின் மக்கள் தொகை 7.5 லட்சம் ஆகும். இதில் அதிகபட்சம் 1 லட்சம் பேர் வரை மட்டுமே வேக்சின் போட தகுதியானவர்கள். இதனால் இன்னும் 1 லட்சம் பேர் வரை அங்கு வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு டோஸ் கொரோனா வேக்சின் செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது கொடுக்கப்படும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மது
நீலகிரியில் டாஸ்மாக் கடைகள் திறந்து உள்ளன. அங்கு வெளியூர் மக்கள் சுற்றுலாவும் வர தொடங்கி உள்ளனர். நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் மது அருந்துபவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்த அச்சம் தெரிவித்து வருகிறார்கள். வேக்சின் போட்டால் மது குடிக்க முடியாதோ என்ற அச்சம் காரணமாக இதை தவிர்த்து வருகிறார்கள்,
Recommended Video

மாவட்டம்
இந்த நிலையில்தான் மது அருந்துபவர்களை வேக்சின் போட வைக்கும் விதமாக இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் குறுந்தகவலை காண்பித்தால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நீலகிரியில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு முதல் மாவட்டமாக நீலகிரி திகழும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications