போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்? ஆண்டிப்பட்டியில் ஓ.பி.ரவீந்திரநாத்.. அறிவாலயத்தில் விருப்ப மனு!
சென்னை: திமுக சார்பாக போடி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிட அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேபோல் தனக்காக போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வந்தனர். ஆனால் சட்டசபைத் தேர்தல் நெருங்கியதால், ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக, அதிமுக மற்றும் தவெக பக்கம் சென்றனர். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்டியணைத்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இதனையடுத்து நாளை தனது ஆதரவாளர்களின் இணைப்பு விழாவிற்காக திருமங்கலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை ஓபிஎஸ் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேபோல் ஓபிஎஸ் சார்பாக போடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
அதேபோல் தனக்கான ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துள்ளார். இதனால் இம்முறை திமுக சார்பாக போடியில் ஓபிஎஸ் களமிறங்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த முறை தேனி மாவட்டத்தின் 3 தொகுதிகளில் திமுக வென்ற போதும், போடி தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். முக்குலத்தோர் சமூக மக்கள் மற்றும் ஓபிஎஸ்ஸின் சொந்தங்கள் அதிகமிருக்கும் தொகுதியாகும்.
இதனால் திமுக சார்பாக போட்டியிட்டாலும் ஓபிஎஸ் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் கணிசமாக திமுக பக்கம் ஓபிஎஸ் திருப்புவார் என்றும் கருதப்படுகிறது. அதற்கான டிரைய்லராக நாளைய இணைப்பு விழா இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications