சில்லு சில்லாய் சிதறிய ஆதரவாளர்கள்.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! ஓபிஎஸ்-ன் புதுக்கட்சி ஏன்?
சென்னை: அதிமுக முன்னாள் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) சத்தமில்லாமல் புதிய அரசியல் கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக வரும் டிசம்பர் 23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்சியின் பெயரை முறைப்படி அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஓபிஎஸ் மிக அமைதியாக இருந்ததால், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். அதனால் விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளதால் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், டிடிவி தினகரனைப் போல தனித்த அரசியல் பாதையை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம்
கடந்த மாதம் நடைபெற்ற 'அதிமுக உரிமை மீட்புக்குழு' மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இதுவரை குழுவாக செயல்பட்டு வந்த அவரது அமைப்பு இனி
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்" என்ற பெயரில் செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓபிஎஸ் புதிய கட்சி
அந்த கூட்டத்தில், டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். ஆனால் அந்த கூட்டம் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், புதிய கட்சியை பதிவு செய்ய சென்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதிமுக உரிமை மீட்புக்குழு
அந்த அறிக்கையின் லெட்டர் பேடில், இதுவரை பயன்படுத்தப்பட்ட 'உரிமை மீட்பு குழு' என்ற வார்த்தைக்கு பதிலாக 'உரிமை மீட்பு கழகம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கட்சி முகவரியும் பசுமை வழிச்சாலை என்ற பழைய முகவரிக்கு பதிலாக நந்தனம் முகவரி என மாற்றப்பட்டிருந்தது. இதன் மூலம், ஓபிஎஸ் ஏற்கெனவே புதுக்கட்சியை பதிவு செய்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
எம்.ஜி.ஆர் நினைவு தினம்
இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில், டிசம்பர் 23-ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திலேயே அல்லது அடுத்த நாள் வரும் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தன்று, ஓபிஎஸ் புதிய கட்சியை முறைப்படி அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், "கட்சி ஒன்றிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தடையாக உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தன்னை நம்பி வந்த தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு ஓபிஎஸுக்கு உள்ளது. ஓபிஎஸ் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்ததால், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் மாற்றுக் கட்சிகளுக்கு சென்று விட்டனர். மேலும், தற்போது ஓபிஎஸால் அதிமுகவின் கரை வேட்டியைக்கூட கட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல்
அதனால், முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், குழு இனி கழகமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக டிசம்பர் 23-ம் தேதி நிர்வாகிகளுடன் விவாதித்து, ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்" என்று தெரிவித்தனர். ஓபிஎஸின் இந்த அரசியல் நகர்வு, அதிமுக அரசியலில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமா?அல்லது பத்தோடு பதினொன்று என்ற ரீதியில் சென்றுவிடுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
-
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications