குடும்ப ஆதிக்கத்தை தலைதூக்க விடமாட்டோம்... சசிகலாவுக்கு செக் வைத்த உறுதிமொழி
சென்னை: அதிமுகவில் தனியொரு குடும்பத்தின் ஆதிக்கத்தை தலைதூக்க விடமாட்டோம் என அக்கட்சியினர் சூளுரை ஏற்றுக்கொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற கட்சியினர் மேற்கண்ட இந்த சூளுரையை ஏற்றுள்ளனர்.
அதாவது சசிகலா குடும்பத்தை சார்ந்த யாருக்கும் மீண்டும் அதிமுகவில் இடமில்லை என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் இந்த உறுதிமொழி அமைந்துள்ளது.
பழைய நோட்டுக்களில் சொத்து வாங்கியது போக.. மீதி பணத்தை சசிகலா மாற்றியது எப்படி?
ஓ.பி.எஸ்
எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ். உறுதிமொழியை வாசிக்க அதனை மற்றவர்கள் வழிமொழிந்து கூறினர்.
விடமாட்டோம்
அதிமுகவில் எந்தவொரு தனி குடும்பத்தின் ஆதிக்கத்தையும் தலைதூக்க விடமாட்டோம் என ஓ.பி.எஸ். உறுதிமொழி வாசித்தது தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். மீண்டும் சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்பதை தெளிவாக குறிப்பிடும் வகையில் இது இருக்கிறது.
தலைவன்
மேலும், ஒரு கட்சிக்கு நல்ல தொண்டர்களும் வேண்டும், நல்ல தலைமையும் வேண்டும் என்றும், இவை இரண்டுமே அமைந்திருப்பது அதிமுகவுக்கு மட்டுமே எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அந்த உணர்வோடு ஒற்றுமையோடு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வேண்டுகோள்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் விட்டுச்சென்ற கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் சாதித்து வெற்றிக்கனியை பறிப்போம் என்ற உறுதிமொழியையும் அவர் கூறினார்.