ஓபிஎஸ்ஸை துயரமடைய வைத்த விசயம்.. இதுக்கும் திமுக அரசுதான் காரணமாம்! பட்டாசு விபத்துகளை தடுக்க ஐடியா
சென்னை: பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையே வெம்பக்கோட்டையை அடுத்துள்ள ராமதேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வின்னர் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தமிழ்நாட்டில் தொடர் கதையாக இருந்து வருகிறது. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் மருந்துக் கலவையின்போது ஏற்படும் உராய்வினால் நிகழ்கின்றன. நேற்று ஏற்பட்ட மேற்படி விபத்துக்கும் மருந்து கலவையின்போது ஏற்பட்ட உராய்வுதான் காரணம் என்று கூறப்படுகிறது. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும், மாவட்ட நிர்வாகத்திற்கும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் உண்டு.
பொதுவாக வெடி விபத்துகள் என்பது மருந்துக் கலவை மேற்கொள்ளும் இடத்தில்தான் நடக்கிறது என்ற நிலையில், தகுதியானோரின் கண்காணிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மருந்துக் கலவைப் பணி நடைபெற்றால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். இதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். இதுகுறித்து நான் பலமுறை தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இருப்பினும் எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக, குறைந்த அளவிலான இழப்பீட்டினை மட்டும் தி.மு.க. அரசு அளித்து வருகிறது.
இதன் விளைவாக பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து விபத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதன்மூலம், தொழிலாளர்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்கிறார்களா என்பதையும், மருந்துக் கலவையினை மேற்பார்வையிட தகுதியானோர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உயரிய நிவாரணத் தொகையினை வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு உயரிய சிகிச்சை மற்றும் நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்றும், மேற்படி விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications