சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்- ப.சிதம்பரம் டுவீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா பாதித்த பகுதிகளை பார்க்காத மோடியை விமர்சித்து ப.சிதம்பரம் டுவீட்- வீடியோ

    பிரதமர் மோடியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்- ப.சிதம்பரம் டுவீட்

    சென்னை: கஜா புயல் பாதிப்புகளுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லாத பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

    P.Chidambaram condemns PM Narendra Modi for not expressing his pain for Gaja

    கஜா புயல் கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடியது. இதனால் மக்கள் உடைமைகளை இழந்ததுடன் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர்.

    இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயல் குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளில் துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புக்கெல்லாம் ஆறுதல் செய்தி வெளியிட்டார். ஆனால் கஜா புயல் பாதிப்புக்கு வேதனை தெரிவித்து ஒரு டுவீட் கூட அவர் வெளியிடவில்லை.

    இது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கஜா புயல் பேரிடர் ஏற்படுத்திய பயங்கர சேதம், உயிரிழப்பு, வாழ்வாதார முடக்கம் ஆகியவற்றிற்கு ஆறுதல் செய்தி கூட தெரிவிக்காத பிரதமரை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Former Finance Minister P.Chidambaram condemns PM Narendra Modi for not expressing his sadness for Gaja cyclone which affects in Delta regions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X