சீனப் படை வாபஸை வரவேற்கிறேன்.. ஆனால் எங்கிருந்து வாபஸ் பெற்றார்கள்.. அதைச் சொல்லுங்க.. ப.சி கேள்வி!
சென்னை: சீனப் படைகள் வாபஸ் பெற்றதை வரவேற்கிறேன். ஆனால் அவை எங்கிருந்து வாபஸ் பெற்றார்கள் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் கூறுகையில் சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன். அந்த படைகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கியது என்பதை யாராவது (மத்திய அரசு) சொல்வார்களா?
அதுபோல் தற்போது எந்த இடத்தில் அவை நிலை கொண்டுள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியுமா? அது போல் இந்திய படைகளும் எந்த இடத்திலிருந்து பின்வாங்கின?.

சிதம்பரம்
சீன ராணுவமோ அல்லது இந்திய ராணுவமோ ஒரு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இன்னொரு எல்லைக்கு நகர்ந்தனரா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் அவசியமானது. ஏனெனில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி எந்த இடத்தில் என்ன ஆனது என்பதை கண்டறிய இந்திய மக்கள் புதையல் வேட்டை போல் தேடி வருகிறார்கள் என ட்விட்டரில் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைகலப்பு
லடாக்கில் உள்ள கால்வனில் கடந்த மே மாதம் முதல் இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பாங்கோ ஏரியில் திடீரென இருதரப்பினருக்கும் இடையே மே மாதம் கைகலப்பு நடந்தது. இதை பேசி தீர்ப்பதற்குள் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15ஆம் தேதி அத்துமீறிய சீன ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

பேச்சுவார்த்தை
இது நாட்டு மக்களை கொந்தளிப்புக்குள்ளாக்கியது. பின்னர் ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து லடாக் எல்லையில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். இதையடுத்து இரு தினங்கள் கழித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன ராணுவ அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

செய்திகள்
வீடியோ காலில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சீன ராணுவம் 1.5 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கியதாக செய்திகள் வந்தன. அது போல் இந்திய படைகளும் பின்வாங்கின. எனினும் பாங்காங் ஏரி பகுதியில் சர்ச்சைக்குரிய பிங்கர் பகுதியில் குறைந்த அளவிலான சீன ராணுவத்தினர் நடமாட்டம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் கால்வன் பிரச்சினை குறித்து ப சிதம்பரம் தனது ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ப சிதம்பரத்தின் கேள்விகளை ட்விட்டர்வாசிகள் சிலர் வரவேற்றும் சிலர் எதிர்த்தும் உள்ளனர்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி











Click it and Unblock the Notifications