Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்ஸிட் போல் முடிவுகளை தயாரித்ததே பாஜக தான்.. மோடி, அமித்ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலம்: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவால் தயாரிக்கப்பட்டது, பிரதமர் மோடி, அமித் ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 240 தொகுதிகளில் வென்றது, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மொத்தமாக 292 இடங்களைக் கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக.

P Chidambaram Congress India Lok sabha election results 2024 2024

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எக்ஸிட் போல் கணிப்புகள் பாஜகவால் போலியாக தயாரிக்கப்பட்டவை எனக் குற்றம்சாட்டி உள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் பேசுகையில், "இந்தியா கூட்டணி அகில இந்திய அளவில் 234 இடங்களை வென்றிருப்பது சாதாரண வெற்றி அல்ல. 400 இடங்களை இலக்கு வைத்திருந்த பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்று உள்ளது. பாஜகவுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

4வது, 5வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் 300 இடங்களை தாண்டி விட்டோம், 400ஐ நோக்கி பீடுநடை போட்டு வருகிறோம் என்றெல்லாம் பீற்றிக்கொண்டார்கள். அவை எல்லாம் எவ்வளவு பொய்யான பிரச்சாரங்கள் என்பவை இப்போது அம்பலமாகியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாள்கள் ஆக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். நான் வாக்குப்பதிவு நடைபெற்றபோது பல இடங்களுக்குச் சென்றேன். எந்த கருத்துக்கணிப்பாளர்களிடம் வாக்களித்தவர்களிடம் கருத்து கேட்டதாக எந்த தகவலும் இல்லை.

இருந்தாலும், நாங்கள் இத்தனை லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு செய்தோம் என கூறி எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிட்டனர்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவால் தயாரிக்கப்பட்டது. இதில் 10 கூட்டி, 10 குறைத்து உங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடுங்கள் என்று கூறினர். எல்லா தொலைக்காட்சிகளிலும் 350 - 400 என்ற எண்களை வெளியிட்டு பொய் பிரச்சாரம் செய்தது பாஜக.

அதையெல்லாம் மீறி இன்று பாஜகவுக்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்திருக்கிறார்கள். நாளை மறுநாள், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். மோடி தனது பேச்சில் ஜவஹர்லால் நேருவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார்.

மோடிக்கு கிடைத்தது, 282, 303, 240 தொகுதிகள் தான். ஆனால், ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்த தொகுதிகள் எண்ணிக்கை 361, 374, 364. அவருடன் பிரதமர் மோடி தன்னை ஒப்பிட்டுக்கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்சனை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+